வியாழன், 28 ஆகஸ்ட், 2014

SRI GANESHA ASHTOTHRA SATHA NAAMAVALI...ஸ்ரீ கணேச அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் கஜானனாய நம
ஓம் கணாத்யக்ஷாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் த்வைமாதுராய நம
ஓம் ஸுமுகாய நம
ஓம் ப்ரமுகாய நம
ஓம் ஸன்முகாய நம
ஓம் க்ருதினே நம
ஓம் ஜ்ஞானதீபாய நம

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியப் பெண்களின் பங்கு.!..


இந்திய சுதந்திரப் போரில், பெண்களும் பங்கு கொண்டதை நாம் அறிவோம்.. ஆயினும், வெளியுலகத் தொடர்பு அதிகம் இல்லாதவர்கள் என்று கருதப்படும் இஸ்லாமியப் பெண்களும், இந்தப் போராட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள். இவர்களது வீரமும் நாட்டுப் பற்றும் மிகவும் போற்றப்படவேண்டிய ஒன்று.

இத்தகைய வீரப் பெண்மணிகள் நால்வரைப் பற்றி, இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

THIRUMAGAL EZHUNTHARULGA!.....திருமகள் எழுந்தருள்க!!!....


இன்று (8/8/2014) வரலக்ஷ்மி விரதம்!.

மதிமுகம் ஒளிர்ந்திட மறைகளும் துதித்திட மங்கை எழுந்தருள்க!
கதியுனை நம்பினேன் கருணையை தந்திட கமலி எழுந்தருள்க!

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

MUNNOOR SOTHTHU!...முன்னோர் சொத்து!.


அன்பர்களுக்கு வணக்கம்!..

இன்றைய தினம், வல்லமை இணைய இதழில், இந்த வாரத்துக்கான‌ வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்காங்க திருமதி. காமாட்சி அவர்கள்.. 80 வயது கடந்து, மிக அருமையான விஷயங்களை அற்புதமாகச் சொல்லும் இவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகி விட்டது..இவரது வலைப்பூவிற்கு இங்கு சொடுக்குங்கள்!.

இவரது வலைப்பூவில், 'அன்னையர் தினத்தை' ஒட்டிய இவரது பதிவுகள் யாவும் அருமை.. அது எனக்கும் என் தாத்தா, பாட்டியின் நினைவை வரவழைத்து விட்டது.. 'முன்னோர் சொத்து' என்று பெயரிட்டிருக்கிறேனில்லையா!..நம் முன்னோர் சொத்து, பணம் காசு மட்டுமல்ல.. அவர்கள் நமக்குச் சொல்லிச் சென்ற புத்திமதிகள், நடைமுறைப்படுத்திக் காட்டிய பழக்கவழக்கங்கள், தெய்வபக்தி, முக்கியமாக, நொறுங்கிப் போன சமயங்களிலும் அதீத விவேகத்துடன் மீண்டெழுந்தது, எந்தச் சமயத்திலும் தெய்வத்தைக் குற்றம் சொல்லாத பண்பு, இன்னும்..இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் அவர்கள் நமக்குத் தந்து விட்டுப் போன சொத்து தான் என்பது என் அபிப்பிராயம்..